2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உலர் வலய நகர நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு கருத்திட்டம் - வவுனியா, பேறு ஆறு நீர்த்தேக்க நிருமாணிப்பின் காரணமாக காணிகள் இல்லாமற் போனமையினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு மாற்றுக் காணி வழங்குதல் - மேற்போந்த கருத்திட்டம் வவுனியா, மன்னார், சிலாபம், புத்தளம் உலர் வலய நகரங்களின் நீர் வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகளை விருத்தி செய்யும் பொருட்டு நகரஅபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கருத்திட்டத்தின் கீழ் வவுனியா, பேறு ஆறு நீர்த்தேக்க நிருமாணிப்பின் காரணமாக காணிகள் இல்லாமற்போன 88 பேர்களுக்கு அவர்கள் உரிமைபாராட்டிய காணிகள் சார்பில் பூரண அளிப்புப்பத்திரம் ஊடாக மாற்று காணிகளை வழங்கும் பொருட்டு காணி அமைச்சர் மாண்புமிகு எம்.கே.ஏ.டி. எஸ்.குணவர்தன அவர்களினாலும் நகரஅபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |