2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சமவச்சதீவு - முனிச்சேனை வீதியில் அமைந்துள்ள தட்டுத்துறை பாலத்தையும் நுழைவுப் பாதையையும் நிருமாணித்தல் - உத்தேச கருத்திட்டத்தின் மூலம் சமவச்சதீவு பிரதேச மக்களுக்கு நெடுஞ்சாலை, சுகாதாரம், கல்வி போன்ற வசதிகளைப் பெறுவதற்கு இலகுவாவதோடு, இதற்கமைவாக நெடுந்தீவு, சள்ளிக்களப்பு, சுள்ளிமுறிச்சந்தீவு, புளிச்சங்கேணி, சமவச்சதீவு, ஆளிம் தீவு போன்ற கிராம மக்களின் வாழ்க்கைத் தரமும் வாழ்வாதாரமும் மேம்படும் அபிவிருத்திக்கான சவுதி நிதியத்தின் உடன்பாட்டுடன் மட்டக்களப்பு - திருகோணமலை வீதி அபிவிருத்தி கருத்திட்டத்தில் பயன்படுத்தாத 601,581 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையை இதற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது. |