2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பதுளை முதல் செங்கலடி வரையிலான ஏ 5 பாதையின் புனர்நிருமாணம் - நாட்டில் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களை இணைக்கும் பிரதான பாதையாக பேராதனை - பதுளை - செங்கலடி பாதை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பேராதனையிலிருந்து பதுளை வரையிலான வீதிப் பகுதி புனரமைக்கப்பட்டுள்ளதோடு, பதுளையிலிருந்து செங்கலடிவரையிலான மீதி 151.3 கிலோ மீற்றர் வீதிப் பகுதி இந்தக் கருத்திட்டத்தின் மூலம் புனரமைக்கப்படவுள்ளது. இதற்காக 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்று சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு மேலதிகமாக இந்தக் கருத்திட்டத்திற்கு மேலும் 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அபிவிருத்திக்கான சவுதி நிதியத்துடன் இணக்கப்பேச்சுக்களை நடாத்துவதற்கும் அதற்கமைவாக கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |