2015-05-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பண்டாரநாயக்க சருவதேச விமான நிலைய அபிவிருத்திக் கருத்திட்டம் - கட்டம் (II) - பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தின் தற்போதைய பயணிகள் செல்கை மற்றும் வருகையை 7.4 மில்லியனிலிருந்து 2020 ஆம் ஆண்டில் 15 மில்லியனாக அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு அத்தியாவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தலானது இந்தக் கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப் படவுள்ளது. இதற்காக 45,428 மில்லியன் யப்பான் யென்கள் (அண்ணளவாக 48,969/- மில்லியன் ரூபா) யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் அதன் உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்வதற்காக யப்பான் அரசாங்கத்துடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் அதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |