2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல் - பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளைத் திருத்தும் பொருட்டு தயாரிக்கப்பட்ட பௌத்த கோவிலுடைமைகள் கட்டளை (திருத்த) சட்டமூலம் சம்பந்தமாக ஊக்கமுள்ள தரப்பினர்களுக்கு மேலும் அவர்களுடைய அவதானிப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கு இடமளிப்பதற்கு 2015‑04‑22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைவாக மாண்புமிகு நீதி அமைச்சரினாலும் சியம்மகா நிக்காயவைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய தேரோக்களினாலும் முன்மொழியப்பட்ட திருத்தங்களையும் உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட இறுதி வரைவை சட்டமா அதிபரின் சிபாரிசுகளைப் பெற்றுக் கொண்டு அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக புத்தசாசன அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |