• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டம் - கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மதியுரைச் சேவையை வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை வழங்குதல்

- தெற்கு பாதை இணைப்புக் கருத்திட்டத்தின் செலவுகளை ஏற்கும் பொருட்டு 70 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையொன்று ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. தெற்கு அதிவேகப் பாதைக்கு செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் அண்ணளவாக 33 கிலோ மீற்றர் இந்த கடன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும். அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்தக் கருத்திட்டத்தின் மதியுரைச் சேவை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைக் கையளிக்கும் பொருட்டு நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.