2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துதல் - அரசியல் தீர்மானங்களை எடுக்கும் செயற்பாட்டில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆகக்குறைந்தது 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு "மைத்திரி ஆட்சிக்கான நிகழ்ச்சித்திட்டம்" என்பதில் தற்போதைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மாகாண சபை தேர்தல் ஒன்றின் போது அரசியல் கட்சிகளினால் அல்லது குழுக்களினால் கையளிக்கப்படும் நியமனப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த அபேட்சகர்களின் எண்ணிக்கையிலிருந்து 30 சதவீதத்திற்குக் குறையாத எண்ணிக்கையில் பெண்கள் இருக்க வேண்டும் என்னும் ஏற்பாடுகளை உள்ளடக்கி 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தை திருத்துவதற்கான சட்டங்களை வரையும் பொருட்டு மாகாண சபைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ஜனக்க பண்டார தென்னக்கோன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |