• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை கோள்மண்டல மனையிடத்தில் ஆய்வுகூடமொன்றை நிருமாணித்தல்

- 1965 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட இலங்கை கோள்மண்டலத்தைப் பார்வையிடுவதற்காக ஒவ்வொரு ஆண்டிலும் வருகைதரும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள் அடங்கலாக பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு இலட்சமாகும். ஆய்வுகூட மென்னும் போது கற்றல் மற்றும் கற்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு மேலதிகமாக காட்சிப் பொருட்கள், கருவிகள் உட்பட ஆர்வத்தைத் தூண்டும் கருத்திட்டங்களைக் கொண்ட படைப்புகளை மேம்படுத்தும் சுற்றாடலைக் கொண்ட சிறந்த இடமொன்றாகும். இலங்கை கோள்மண்டல மனையிடத்தில் ஆய்வுகூடமொன்றை மேம்படுத்துவதற்கும் அதற்காக நன்கொடை வழங்கும் சருவதேச நிறுவனங்களிட மிருந்து நிதி உதவிகளை பெற்றுக் கொள்ளும் சாத்தியம் பற்றி ஆராய்வதற்குமாக உயர் கல்வி, ஆராய்ச்சி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.