• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிராந்தியக் கைத்தொழில் பேட்டைகளிலிருந்து கைத்தொழில்களை நிறுவுவதற்கு காணித் துண்டுகளை குறித்தொதுக்குதல்

- கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் "பிராந்திய கைத்தொழில்பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்" பிராந்திய மட்டத்தில் கைத்தொழில்மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு நடைமுறைப் படுத்தப்படும் பிரதான நிகழ்ச்சித்திட்டமொன்றாகும். கைத்தொழில்பேட்டைகளில் காணப்படும் வெற்றுக் காணிகளுக்கு பொருத்தமான முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்காக கடந்த காலப்பகுதியில் பிரசுரிக்கப்பட்ட பிரசித்த அறிவித்தல்களுக்கு சார்பாக கிடைத்துள்ள 34 கருத்திட்டப் பிரேரிப்புகளிலிருந்து குறித்த முதலீட்டாளர்களின் நிதிசார் ஆற்றல், வருமானவரி செலுத்துகை, ஊழியர் சேமலாப நிதியத்திற்கான செலுத்துகை, வங்கிக்கடன் மீள் செலுத்துவதிலான முன்னேற்றம், தொழில்வாய்ப்பு உட்பட சுற்றாடல் நட்புறவு போன்ற விடயங்களை கவனத்திற்கு எடுத்துக்கொண்டு அமைச்சின் கருத்திட்ட மதிப்பீட்டுக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட 14 கருத்திட்ட பிரேரிப்புகளுக்காக 35 வருடகால குத்தகை அடிப்படையில் இயைபுள்ள கைத்தொழிற்பேட்டைகளிலிருந்து காணித்துண்டுகளை குறித்தொதுக்குவதற்கும் முதலீட்டாளர்களுடன் உடன்பட்டவாறு திட்டவட்டமான காலப்பகுதிக்குள் கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லையாயின் குறித்த காணியை மீள அரசுடைமையாக்குவதற்கும் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.