2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொத்மலை மகாவலி மகாசாய நிருமாணிப்பு பணிகளை பூர்த்தி செய்தல் - 2015 - 1983 ஆம் ஆண்டில் நிருமாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கொத்மலை மகாவலி மகாசாய நிருமாணிப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான மேலதிக நிதி ஏற்பாடுகளை பொது திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |