• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்சார சபையுடனும் தொழிற் சங்கங்களுடனும் கூட்டு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்ளல்

- இலங்கை மின்சார சபையின் செயற்திறனை அதிகரிப்பதற்கும் ஊழியர்களுக்கும் முகாமைத்துவத்துக்கும் இடையில் நிருவாக ரீதியிலான உடன்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இயலுமானவாறு இலங்கை மின்சார சபைக்கும் இயைபுள்ள தொழிற்சங்களுக்கும் இடையில் 2014‑12‑01 ஆம் திகதியன்று செய்து கொள்ளப்பட்டுள்ள கூட்டு உடன்படிக்கைக்கு அங்கீகாரம் பெறுவதன் பொருட்டு மின்வலு, எரிசக்தி அமைச்சர் மாண்புமிகு பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.