2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடியின் முறையற்ற பாவனையை தடுத்தலும் உரிய மதிப்பினை வழங்குதலும் - இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடியின் பாவனை தொடர்பில் அமைச்சரவையினால் 1986 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட விதிகளுக்கு முரணாக இந்த கொடியின்பால் காட்டும் மதிப்பு குறையும் விதத்தில் பயன்படுத்தப்படுகின்றதெனவும் இலங்கைக் கட்டளைகள் நிறுவனத்தின் கட்டளை நியமங்களுக்கு அமையாதவாறு தயாரிக்கப்பட்ட தேசியக்கொடி சந்தையில் உள்ளதெனவும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளமையினால், மதிப்பளித்தல் மற்றும் முறையற்ற பாவனையைத் தடுத்தல் போன்றவற்றுக்காக இந்த விதிகளை சட்டமொன்றாக மாற்றுவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் விழாக்களின் போது அரசாங்கத்திற்கும் அதேபோன்று பொது மக்களுக்கும் பயன்படுத்தக்கூடிய உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய விழாக் கொடியொன்றை வடிவமைக்கும் பொருட்டு குழுவொன்றை நியமிப்பதற்குமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்ப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |