2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இராஜதந்திர கடவுச் சீட்டுக்களுடைய ஆட்களை வீசா அனுமதிப்பத்திரங்களை பெறுவதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ருமேனியா அரசாங்கத்திற்குமிடையில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் - இலங்கை அரசாங்கத்திற்கும் ருமேனியா அரசாங்கத்திற்கும் இடையில் நட்புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இராஜதந்திர கடவுச் சீட்டுக்களுடைய ஆட்களை வீசா அனுமதிப்பத்திரங்களை பெறுவதிலிருந்து விலக்களிப்பதற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் ருமேனியா அரசாங்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைச் செய்து கொள்வதற்காக மக்கள் ஒழுங்கு மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |