• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெயட்ட கிருள தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2015 ஆம் ஆண்டின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்களைப் பூர்த்தி செய்தல்

- காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி மாவட்டங்களைத் தழுவி தெயட்ட கிருள தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள கருத்திட்டங்களின் மீதி வேலைகளிலிருந்து அத்தியாவசிய மானதென இனங்காணப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் பணிகளை குறித்த மாவட்டங்களில் வதிந்துள்ள மக்களின் நலனின் பொருட்டு பூர்த்தி செய்வதற்காக கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.