• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சேதமடைந்த தேரவாதி பௌத்த விகாரைகளை புனரமைத்தல்

- அண்மையில் நேபாளத்தில் நிகழ்ந்த பாரிய நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு மக்களுக்கு பாரிய அளவில் சேதம் நிகழ்ததோடு, இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டில் அந்நாட்டு மக்களுக்கு சலுகை அளிப்பதற்கு நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டதோடு, அத்தியாவசிய பொருட்களும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிகழ்வுகாரணமாக அந்நாட்டிலுள்ள தேரவாதி பௌத்த விகாரைகள் பல சேதமடைந்துள்ளதென இலங்கை தூதரகத்தினால் அறிக்கையிடப்பட்டுள்ளது. புத்தசாசன அமைச்சரும் அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சருமான மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பின் பிரகாரம் அவ்வாறு சேதமடைந்துள்ள வழிபாட்டுத் தலங்களிலிருந்து பௌத்த வழிபாட்டுத் தலமொன்றையும் இந்துமத வழிபாட்டுத் தலமொன்றையும் புனரமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.