2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2015 மே மாதம் 02 ஆம் திகதியிலிருந்து 05 ஆம் திகதிவரை அஷர்பைஜான் பாகு நகரத்தில் நடாத்தப்பட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் 48 ஆவது வருடாந்த கூட்டத்தில் மாண்புமிகு நிதி அமைச்சரின் பங்குப்ற்றல் - அஷர்பைஜான் பாகு நகரத்தில் நடாத்தப்பட்ட ஆசிய அபிவிருத்தி வங்கியின் 48 ஆவது வருடாந்த கூட்டத்திற்கு இலங்கையை பிரதிநிதிதுவப்படுத்தி நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டுள்ளமை அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விஜயத்தின் போது சார்க் நிதி அமைச்சர்களின் உத்தியோகபூர்வமற்ற கூட்டமொன்றிலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மற்றும் உபதலைவருடன் சில கூட்டங்களிலும் நிதி அமைச்சர் கலந்து கொண்டுள்ளமை பற்றியும் அமைச்சரவை மேலும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டது. |