• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீர்வழங்கல், துப்பரவேற்பாட்டு மேம்பாட்டுக் கருத்திட்டம்

- முல்லைத்தீவு, கிளிநொச்சி, நுவரெலியா, பதுளை, கேகாலை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 540 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இணைத்துக் கொண்டு குழாய்நீர் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நடைமுறைப்படுத்தப்படும் "நீர்வழங்கல், துப்பரவேற்பாட்டு மேம்பாட்டு 2015 - 2020 கருத்திட்டம்" சார்பில் ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக165 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு சமமான விசேட எடுத்தல் உரிமை வர்த்தகக் கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு உலக வங்கியின் சருவதேச அபிவிருத்தி சமவாயத்துடன் கடன் இணக்கப் பேச்சுக்களை நடாத்துவதற்கும் நிதி உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்குமாக நிதி அமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.