2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குடியரசுத் தினக் கொண்டாட்டம் - 1972‑05‑22 ஆம் திகதி முதலாவது குடியரசு சட்டம் அங்கீகரிப்பித்துக் கொண்டதன் பின்னர், இலங்கை மக்களுக்கு பொறுப்பு சொல்லும் சுயாதீன, சுதந்திர நாடொன்றாக மாற்றப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை நினைவுகூரும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 22 ஆம் திகதியன்று வரும் குடியரசு தினத்தை கொண்டாடும் முகமாக சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதோடு, இந்த தடவையும் அதற்கான சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வழங்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோசப் மைக்கல் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |