• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படும் உபாயவழிகள் தொடர்பான அலுவலகத்தை இல்லாதொழித்தல்

- மேற்போந்த அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் தற்போது பரந்துபட்டுள்ளதோடு, இராணுவ வீரர்களை சிவில் சமூகத்தினருக்கிடையே நட்புறவை வளர்ப்பதற்கான புதிய அனுகுமுறை யொன்றை இனங்காணுதல், இனங்களுக்குடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் போன்றவை இவற்றுல் முதன்மையானவையாகும். இந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் முகமாக ஆற்றல் உட்பட பயிற்சி பெற்ற பதவியணியைக் கொண்ட ஆராச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவொன்று பாதுகாப்பு அமைச்சில் ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ளமையினால் புறம்பாக உபாயவழிகள் தொடர்பான அலுவலகமொன்றை பேணும் தேவை இல்லாததோடு இதன் மூலம் அரசாங்கத்திற்கு மேலதிக செலவு பளு ஏற்பதற்கும் நேரிடும். ஆதலால், மேற்போந்த அலுவலகத்தை இல்லாதொழிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.