• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டம்

- கொழும்பு நகரத்தின் கழிவு நீர் முறைமையை நவீனமயப்படுத்துவதன் மூலம் நகரத்தில் வாழும் மக்கள் வாழ்வதற்கு மிகச் சிறந்த ஆரோக்கியம் மிக்க சூழலொன்றை உருவாக்குவதற்காக மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறை ப்படுத்துவதன் சார்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கொழும் மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள கழிவுநீர் நிலையத்தை வடிவமைத்துல், நிருமாணித்தல், பொருத்துதல், புனரமைத்தல் முதலியவற்றுக்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.