2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் பற்றிய கலந்துரையாடல் - இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையில் விமான சேவைகளை ஏற்படுத்தி கொள்வது சம்பந்தமான கலந்துரையாடல்கள் இரு நாடுகளினதும் பிரதிநிதிகளுக்கிடையில் கசகஸ்தானின் அஸ்தான் நகரத்தில் நடாத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இரு நாடுகளுக்குமிடையில் விமான சேவைகளை மேற்கொள்ளும் பொருட்ு ஏற்கனவே உத்தியோகத்தர்கள் மட்டத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ள விமான சேவைகள் உடன்படிக்கையை இலங்கையின் அதிகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரின் ஊடாக கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர், அதனை செயல்வலுவாக்கம் செய்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக விமான சேவைகள் அமைச்சர் மாண்புமிகு றெஜினோல்ட் குரே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |