2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மலேசிய அரசாங்கத்தின் மனிதவள அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் வீட்டுப் பணிபெண்கள் / ஊழியர்களை பணிக்கமர்த்தல் சம்பந்தமான உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை - புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளையும் அவர்களுடைய நலனோம்பல் வசதிகளையும் பாதுகாக்கும் விதத்தில் வீடுப் பணிபெண்களினதும் ஏனைய ஊழியர்களையும் தொழிலுக்கு அமர்த்துதல் சம்பந்தமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மலேசிய அரசாங்கத்திற்குமிடையில் இரண்டு (02) புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் பொருட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் மாண்புமிகு (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்ப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |