• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பழக்கப்பட்ட யானைகளை பதிவு செய்வதனை முறைப்படுத்தல்

- வனவுயிர், தாவர பாதுகாப்பு சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளின் கீழ் இலங்கையில் வீடுகளில் வைத்திருக்கும் பழக்கப்பட்ட யானைகளை தம் பொறுப்பில் வைத்திருப்பதற்கு வனவுயிர் பாதுகாப்புத் திணைக்களத்தில் பதவி செய்து வருடாந்த உரிமப்பத்திரமொன்று பெற்றுக் கொள்தல் வேண்டும். இதற்கமைவாக, ஏற்கனவே மிருககாட்சிசாலை திணைக்களத்தின் கட்டுக்காப்பிலுள்ள யானைகளுக்கு மேலதிகமாக தனியாட்களின் கட்டுகாப்பில் வைத்திருக்கும் 161 யானைகள் வனவுயிர் பாதுகாப்புத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த காலத்திற்குள் இந்த பதிவு செய்யும் முறையில் நிகழ்ந்த முறைக்கேடுகள் உட்பட சட்டத்திற்கு முரணாக காடுகளில் யானைக் குட்டிகளை பிடிப்பது தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப் பெற்று புலனாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பிக்குமார்கள், பழக்கப்பட்ட யானைகளின் சங்கம் உட்பட இது தொடர்பில் ஊக்கமுள்ள தரப்பினர்களிடமிருந்து பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, இலங்கையில் வீடுகளில் யானைகளை தமது கட்டுக்காப்பில் வைத்துக் கொள்வதனை ஒழுங்குறுத்தும் பொருட்டு குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.