• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-05-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டு உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு சேவை கட்டளை, பதவிநிலைத்தர கல்லூரியில் பயிற்சி பாடநெறிகளுக்கான வாய்ப்பினை வழங்குதல்

- பாதுகாப்பு சேவை கட்டளை, பதவிநிலைத்தர கல்லூரி நாட்டிலுள்ள அதிஉயர் யுத்த பயிற்சி நிறுவனமொன்றாவதோடு, இதன் மூலம் முப்படைகளுக்கும் இலங்கை பொலிசாரின் மத்தியதர உத்தியோகத்தர் களுக்கும் பயிற்சி வழங்கப்படுகின்றன. அதேபோன்று தெரிவு செய்யப்பட்ட முப்படைகளையும் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு உயர் மட்டத்திலான பதவிகளை வகிப்பதற்குத் தேவையான அறிவு, ஆற்றல், உயர் கட்டளை உட்பட பதவிநிலை செயற்பாடுகளை பயிற்றுவிப்பதும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் முப்படை உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு இராணுவ உத்தியோகத்தர்களுடன் கூட்டாக நடாத்தப்படும் பயிற்சி வாய்பொன்றாகவும் நட்புறவை வெளிப்படுத்தும் முகமாகவும் வெளிநாட்டு இராணுவத்தினரின் அறிவு மற்றும் அனுபவத்தினை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இந்த பாடநெறியினை கற்பதற்கு 27 வெளிநாட்டு இராணுவ உத்தியோகத்தர்களுக்கு வாய்ப்பளிக்கும் முகமாக பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.