2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நடைமுறையிலுள்ள தேர்தல் முறையை திருத்துவதற்கான உத்தேச சட்டத் திருத்தம் - 2015‑04‑22 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு உரிய தரப்பினர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், புதிய தேர்தல் முறையொன்றுக்கான சட்டமூலமொன்று அதிமேதகைய சனாதிபதியினால் அமைச்சரவையின் கவனத்தின் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டதோடு, மேலும் இது தொடர்பிலான அவர்களுடைய கருத்துக்களை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. |