• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உலக வர்த்தக கண்காட்சி, மிலானோ, இத்தாலி - 2015

- மேற்போந்த கண்காட்சி இரண்டு (02) வருடங்களுக்கு ஒரு தடவை பல்வேறுபட்ட தொனிப்பொருளின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட நாடுகளின் பிரதான நகரங்களில் நடாத்தப்படுவதோடு, அடுத்த "உலக வர்த்தக கண்காட்சி" 2015 மே மாதம் 01 ஆம் திகதியிலிருந்து 2015 ஒக்ரோபர் மாதம் 31 ஆம் திகதிவரை ஆறு (06) மாத காலம் முழுவதும் இத்தாலியின் மிலானோ நகரத்தில் நடாத்தப்படவுள்ளது. இந்தக் கண்காட்சியில் இலங்கையும் பங்குபற்றவுள்ளதெனவும் இதன் ஊடாக இலங்கையின் சிறப்பினை எடுத்துக் காட்டி மேலைத்தேய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதும் இலங்கையின் அடையாளத்தை மேம்படுத்துவதும் நோக்கமாகு மெனவும் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.