• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு

- தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமான பிரச்சினைக்கு துரிதமாக தீர்வொன்று வழங்கும் நோக்கில் கொள்கை ரீதியில் 2005 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க வரவுசெலவுத்திட்ட சலுகைப் படிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வழிமுறை மற்றும் சமமான சட்டமொன்றை கொண்டுவரும் தேவை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இயைபுள்ள நோக்கத்திற்காக சட்டங்களை வரையும் பொருட்டு தொழில் அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பின்வரும் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் குறித்த சட்டமூலத்தில் உள்வாங்குவதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது:

* தனியார் துறையிலுள்ள அனைத்து ஊழியர்களினதும் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000/- ரூபாவாகும். இதற்கமைவாக ஆகக்குறைந்த நாட்சம்பளம் 400/- ரூபாவாகும்.

* 2015 மே மாதம் 01 ஆம் திகதியிலிருந்து இது அடிப்படை சம்பளமாக நடைமுறைப்படுத்தப்படும்.

* தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் 2,500/- ரூபாவால் அதிகரிக்கப்படும். முதலாம் கட்டமாக 2015‑05‑01 ஆம் திகதியிலிருந்து ஊழியர்களின் சம்பளம் 1,500/- ரூபாவால் அதிகரிக்கப்படுவதோடு, இதற்கமைவாக நாட்சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளம் 60/- ரூபாவால் அதிகரிக்கப்படும்.

* இரண்டாம் கட்டத்தின் கீழ் சம்பள அதிகரிப்பானது 2016‑01‑01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதோடு, 2015‑12‑31 ஆம் திகதியன்றுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு மேலும் 1,000/- ரூபா சேர்க்கப்படும். இதற்கமைவாக, நாட்சம்பளம் பெறும் ஊழியர்களின் சம்பளம் 40/- ரூபாவால் அதிகரிக்கப்படும்.