2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தகவல் அறிந்து கொள்ளும் உரிமை பற்றிய சட்டமூலம் - கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற தகவல் அறிந்து கொள்ளும் உரிமை பற்றிய சட்டமூலத்திற்கு பல்வேறுபட்ட நிறுவனங்களினாலும் ஆட்களினாலும் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மையினால், இந்த திருத்தங்களை பாராளுமன்ற குழுநிலை சந்தர்ப்பத்தில் பரிசீலனை செய்வதற்காக சமர்ப்பிப்பதற்குப் பதிலாக அமைச்சரவையினால் பரிசீலனை செய்வதற்காக குறித்த திருத்தங்களை உள்ளடக்கி இறுதியாக தயாரிக்கப்பட்ட சட்டமூலமானது பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இந்த சட்டமூலம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. அதேபோன்று, தகவல் அறிந்து கொள்ளும் உரிமை பற்றிய சட்டமூலமும் தேசிய கணக்காய்வு சட்டமூலமும் அவசர சட்டமூலங்களாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காது சட்டமூலங்களை அங்கீகரிப்பித்துக் கொள்வதற்கான பொது வழிமுறையை பின்பற்றி இந்த சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கும்கூட அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |