2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வட மத்திய மாகாண கால்வாய் அபிவிருத்திக் கருத்திட்டம் - 1 ஆம் கட்டத்திற்கான நிருமாணிப்புகளை நடைமுறைப்படுத்துதல் - மகாவலி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 1970 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்படவுள்ள நீர் விநியோக முதலீட்டு செயற்பாட்டினை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உயர் முன்னுரிமை வழங்கியுள்ளது. நடைமுறைப்படுத்தும் பொருட்டு தற்போது எஞ்சியுள்ள முக்கிய பகுதியாவது வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நீர் வழங்குதலாகும். இதற்கமைவாக, வட மாகாணத்தில் கால்வாய் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, வடமத்திய மாகாணத்தில் கால்வாய் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் I ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் அதற்குரிய தொடர் நடடவடிக்கைகளை செய்யும் பொருட்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |