2015-04-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கமத்தொழில் திணைக்களத்திற்கு மதியுரைச் சபையொன்றை நியமித்தல் - கமத்தொழில் அமைச்சின் கீழுள்ள கமத்தொழில் திணைக்களம் நாட்டின் கமத்தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் பொறுப்புவாய்ந்த முக்கிய நிறுவனமொன்றாவதோடு, பயிர் உற்பத்தி, விளைவு பெருக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துதல், நுகர்வோருக்கு நியாயமான விலைக்கு உயர்தரம் மிக்க விவசாய உற்பத்திகளை குறைவின்றி வழங்குதல் முதலியவை இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நோக்கத்தினை வெற்றி கொள்வதற்கு மதியுரை வழங்கும் பொருட்டு கமத்தொழில் தொடர்புபட்ட நிறுவனங்கள் மற்றும் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்களையும் ஆட்களையும் கொண்ட "கமத்தொழில் திணைக்கள மதியுரைக்குழு" என்னும் பெயரில் குழுவொன்றைத் தாபிக்கும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |