• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மின்மாற்றி மற்றும் விநியோக வலையமைப்பின் அபிவிருத்தி மற்றும் செயற்திறனை மேம்படுத்தும் கருத்திட்டம்

- இலங்கையில் மின்சார தேவை கடந்த பத்து வருடகாலத்தில் வருடாந்தம் 5 சதவீதம் - 7 சதவீதம் வரையிலான சராசரி பெறுமதியில் அதிகரித்து வருகின்றதோடு, நாட்டின் பொருளாதார அபிவிருத்தியுடன் இந்த நிலைமை தொடர்ச்சியாக நிலவுகின்றது. இதனால் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, இந்த நாட்டின் அனைத்து மக்களுக்கும் தரம் மிக்க மின்சார விநியோகத்தினை தடையின்றி வழங்கும் பொருட்டு மின்சார விநியோகத்தின் போது நிகழும் விரயத்தை குறைத்துக் கொண்டு மின்சார மின்மாற்றிகளையும் மின் விநியோக வலயமைப்புகளையும் பலப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, மேற்போந்த கருத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, இதற்காக யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினால் 24,930 மில்லியன் யப்பான் யென்கள் (அண்ணளவாக 26.873 மில்லியன் ரூபா) கடன் தொகை யொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கான பரிமாற்றப் பத்திரங்களை யப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடு வதற்கும் இந்த கருத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இடையில் கடன் உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்குமாக கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.