• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க உதவித்திட்ட முகவராண்மையுடனான உடன்படிக்கைகளை நீடித்தல்

- 1956 ஆம் ஆண்டிலிருந்து சுகாதாரம், கல்வி, தொழினுட்ப பயிற்சி, கமத்தொழில் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி, சுற்றாடல் மற்றும் இயற்கை வள முகாமைத்துவம், உள்ளூராட்சி, மனிதநேய உதவிகள் போன்ற துறைகளுக்குரிய நிகழ்ச்சித்திட்டங்கள் ஐக்கிய அமெரிக்க குடியரசின் உதவியுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. நல்லாட்சி, பொருளாதார அபிவிருத்தி, மனிதநேய உதவி போன்ற பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அண்மிக்கும் வகையில் சருவதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க உதவித்திட்ட முகவராண்மை இலங்கையுடன் இணைந்து செயலாற்றுகின்றது. இதன்கீழ் தற்போது நடைமுறையிலுள்ள நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து முழுமையான நலனைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த நிகழ்சசித்திட்டங்களுக்குரிய உடன்படிக்கைகளின் காலத்தை நீடிக்கும் பொருட்டு கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.