• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரிய கொழும்பு பிரதேசத்தையும் மேற்கு வலயத்தையும் அபிவிருத்தி செய்யும் திட்டத்தை வகுத்தமைத்தல்

- மேற்கு வலயமும் கொழும்பு நகரமும் தெற்காசியாவில் துரிதமாக அபிவிருத்தி அடைந்துவரும் வலய மொன்றாவதோடு / நகரமொன்றாவதோடு, இந்த வலயம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது. சிறந்த நகர அபிவிருத்தி திறமுறையொன்று நிலவுவது நிலைபேறுடைய அபிவிருத்திக்கு அத்தியாவசிய மானதாகும். கொழும்பு நகரம் எதிர்காலத்தில் தெற்காசியாவில் மிகமுக்கிய நகரமொன்றாகவும் வலய நிதி மற்றும் வர்த்தக கேந்திர நிலையமாகவும் மாற்றுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட அனைத்தும் உள்ளடக்கப்பட்ட செயற்பாட்டு திட்டமொன்றின் மூலம் மேற்கு வலயத்தையும் கொழும்பு நகரத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு வழிகாட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்கமைவாக, திட்ட செயற்பாட்டினை துரிதப்படுத்தும் நோக்கில் 2004 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மேற்கு வலய Magapolis திட்டத்தை நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு தயாரிப்பதற்கும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.