2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடை வழங்குவதற்குத் தேவையான துணிகளைக் கொள்வனவு செய்தல் - 2015 - நாடு பூராவும் நடாத்திச் செல்லப்படும் அறநெறி பாடசாலைகளில் தன்னார்வ அடிப்படையில் சேவை புரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு சீருடை வழங்குதலானது 2004 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் 2015 ஆம் ஆண்டிற்காக அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான 30,000 ஜக்கட் துணிகளுடனான கைத்தறி சேலைகளை அரசாங்க நிறுவனமொன்றான புடவைக் கைத்தொழில் திணைக்களத்தின் ஊடாக சேலையொன்று 1,400/- ரூபா வீதம் 42 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்வதற்காக புத்தசாசன அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |