• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தண்டனை வழங்கப்பட்டவர்களை இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் பரிமாற்றம் பற்றிய உடன்படிக்கை

- இலங்கையில் நீதிமன்றம் ஒன்றினால் குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட வேறு நாட்டைச் சேர்ந்த பிரசையொருவருக்கு அவருடைய மறியற் தண்டனையை தான் பிரசையாகவுள்ள நாட்டில் கழிப்பதற்கான வாய்ப்பினை வழங்கும் பொருட்டிலான ஏற்பாடுகள் 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கை பிரசையொருவர் வேறு நாடொன்றில் மறியற் தண்டனையை கழிக்கும் சந்தர்ப்பம் ஒன்றில் அவருடைய மறியற் தண்டையின் எஞ்சிய காலப்பகுதியை இந்த நாட்டில் கழிக்கும் பொருட்டு அவர்களை இலங்கைக்கு ஒப்படைப்பதற்கும் கூட இந்த சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் உரியதாவது இலங்கை இந்த விடயத்திற்குரியதாக பிறிதொரு நாடொன்றுடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டுள்ள சந்தர்ப்பத்திலாகும். இதற்கமைவாக, மறியற்தண்டனை விதிக்கப்பட்ட ஆட்கள் இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் ஒப்படைக்கும் பொருட்டிலான மேற்போந்த உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் பொருட்டு நீதி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.