• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச நடுத்தீர்ப்பு நிலையத்தை செயற்படுத்தும் பொருட்டு வரையறுக்கப்பட்ட பொறுப்புள்ள கம்பனியொன்றைப் பதிவுசெய்தல்

- இந்த நாட்டிலுள்ள ஆற்றல் மற்றும் தொழில் சார்பு நிலைமைகளைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இலங்கை சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சேவைகள் சம்பந்தமாக வலய கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்தவற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஒரு நடவடிக்கையாக சருவதேச வர்த்தக சமூகத்தின் கோரிக்கையினை நிறைவுசெய்யும் நோக்குடன் பிணக்குகளை தீர்த்துக் கொள்ளும் பக்கசார்பற்ற, வினைத்திறன் மிக்க, நம்பத்தகுந்த பொறிமுறை யொன்றை ஆசியாவில் உருவாக்கும் நோக்குடன் சருவதேச நடுத்தீர்ப்பு நிலையமொன்று இலங்கையில் தாபிக்கப்பட்டது. இந்த நிலையத்தின் பணிகளை இந்த ஆண்டு மே மாத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதோடு, இதன் நிருவாக பணிகளை மிக வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்திற்குச் சொந்தமான கம்பனியொன்றை ஆரம்பிக்கும் பொருட்டு நீதி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.