• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க, பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துதல்

- பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச் சட்டத்துக்கான உத்தேச திருத்தங்கள் மாநாயக்க தேரோக்களின் மதியுரை, வழிகாட்டல் உட்பட அங்கீாரத்தின் மீது மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதற்கமைவாக, தயாரிக்கப்பட்ட பௌத்த கோவிலுடைமைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் புத்தசாசன அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கலந்துரையாடலுக்குப் பின்னர், சட்டமூலம் பற்றி ஊக்கமுள்ள அமைச்சர்களின் கருத்துரைகளுக்காக பிற்போடப்பட்டது.