• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலி யுகம் - 2015

- தெற்கின் அழகு, முக்கியமாக காலி மாவட்டத்தின் இயற்கை, அபிமானம் மற்றும் பெருமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் நோக்கில் சுற்றுலாத்துறையை கவரும் நிகழ்ச்சித்திட்டங்கள், கமத்தொழில், வர்த்தக, தொழினுட்ப கண்காட்சிகள் போன்றவை உள்ளடக்கப்பட்ட "காலியுகம்" என்னும் விழாவும் கண்காட்சியும் 2008 - 2009 ஆம் ஆண்டுகளில் காலி நகரத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக நடாத்தப்பட்டது. இதற்கமைவாக, தென்மாகாண சபையினதும் காலி மாநகரசபையினதும் ஒத்துழைப்புடன் "காலியுகம் 2015” விழாவையும் கண்காட்சியையும் இந்த ஆண்டின் திசெம்பர் மாதம் 27, 28, 29, 30,31 ஆகிய திகதிகளில் காலி நகரத்தை மையமாகக் கொண்டு நடாத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதென அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி பற்றிய அமைச்சர் மாண்புமிகு கரு ஜயசூரிய அவர்களினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.