• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிலிப்பைன்சு குடியரசுடனும் கம்போடியா இராச்சியத்துடனும் இலங்கையினால் மேற் கொள்ளப்படவுள்ள இருதரப்பு அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பித்தல்

- இலங்கை பிலிப்பைன்சு குடியரசுடனும் கம்போடியா இராச்சியத்துடனும் நீண்டகால இருதரப்பு உறவுகளை பேணி வருகின்றதோடு, பரஸ்பர நலன்களை நோக்காகக் கொண்டு இந்த உறவுகளை புதிய துறைகளின்பால் விரிவுபடுத்தும் சாத்தியம் நிலவுகின்றது. அதேபோன்று பிலிப்பைன்சும் கம்போடியாவும் வலய மற்றும் இருதரப்பு சமவாயங்களில் இலங்கையுடன் ஒத்துழைப்பு காட்டி செயலாற்றும் இரண்டு நாடுகளாகும். இதற்கமைவாக, இலங்கையின் சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் பிலிப்பைன்சு குடியரசின் வெளிநாட்டலுவல்கள் திணைக்களத்துடனும் கம்போடியா இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் சருவதேச உறவுகள் பற்றிய அமைச்சுடனும் அரசியல் ஆலோசனை பற்றிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.