• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய ஒற்றுமைக்கான அலுவலகமொன்றைத் தாபித்தல்

- இலங்கையர்களின் அடையாளத்தைப் பாதுகாத்து சகல பிரசைகளுக்கும் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியல் துறைகளில் சமமான வாய்ப்பினை ஏற்படுத்துவதனை உறுதிப்படுத்துவதும் சகல இன மக்களும் பரஸ்பரம் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து பல் வாழ்க்கை முறைக்கும் மதிப்பளிக்கும் சமூகமொன்றை உருவாக்குவதுமான செயற்பணியை நோக்காகக் கொண்டு இலங்கையில் சமாதானம் மிக்க அத்துடன் எந்தவொரு இனப்பிரிவும் பெரும்பான்மை சமூக அமைப்பினால் பாதுகாக்கப்படும் சமூகமொன்றைப் கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய ஒற்றுமைக்கான அலுவலக மொன்றைத் தாபிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.