• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்கலைக்கழகங்களுக்கான மாஹாபொல புலமை பரிசில் மற்றும் மாணவர் உதவு தொகையை அதிகரித்தல்

- மஹாபொல புலமை பரிசில் கொடுப்பனவை 2015‑07‑01 ஆம் திகதியிலிருந்து மாதமொன்றுக்கு 5,000/= ரூபா வரை அதிகரிப்பதற்கு 2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டதோடு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடையின்றி கல்வி பணிகளில் ஈடுபடுவதற்கான சூழலைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த பிரேரிப்பை 2015‑05‑01 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்துவதற்கும் மாணவர் உதவு தொகையை அத்தினத்திலிருந்து 2,000/= ரூபாவிலிருந்து 2,500/= ரூபாவாக அதிகரிப்பதற்குமாக உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.