2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் பூட்டான் இராச்சிய அரசாங்கத்திற்கும் இடையே இருதரப்பு மதியுரை புரிந்துணர்வு உடன்படிக்கை - மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் வெளிநாட்டு செயலாளர்களின் மட்டத்தில் மிக முறையான விதத்தில் கொழும்புக்கும் திம்புவுக்கும் இடையில் இருதரப்பு மதியுரை சார்பில் பொறிமுறையொன்றைத் தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதோடு, அதில் அரசியல், பொருளாதார கலாசார, கல்வி ஒத்துழைப்பு அடங்கலாக பரஸ்பரம் முக்கியமான இருபக்க விடயங்கள், வலய மற்றும் சருவதேச விடயங்கள் பற்றிய கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும். இதற்கமைவாக பூட்டான் பிரதம அமைச்சர் மாண்புமிகு ரிசெரின் றொப்கே அவர்களின் இலங்கைக்கான விஜயத்தின் போது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் பூட்டான் இராச்சிய அரசாங்கத்திற்கும் இடையே மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அஜித் பி.பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |