2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹர அலுவலக மனையிடத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள சாரதிகள் பயிற்சி ஓடுபாதை மற்றும் வாகனத் தரிப்பிடம் - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான செய்முறை பரீட்சைகள் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்படுவதோடு, கொழும்பு மாவட்டத்திற் குரிய செய்முறைப் பரீட்சைகள் வேரஹர அலுவலக மனையிடத்தில் நடாத்தப்படுகின்றன. வேரஹர அலுவலகத்திற்கு மாதமொன்றில் செய்முறைப் பரீட்சைகளுக்காக சுமார் 10,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதோடு, தற்போது இந்த செய்முறைப் பரீட்சைகள் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த செய்முறைப் பரீட்சைகள் நெடுஞ்சாலைகளில் நடாத்துவது மிக கடினமான பணியொன்றாக உள்ளதோடு, அதற்காக உலகிலுள்ள ஏனைய நாடுகள் வேறு நவீன முறைகளை பயன்படுத்துகின்றன. இதற்கமைவாக சாரதிகளுக்கான செய்முறைப் பரீட்சைகள் சார்பில் ஓடுபாதையொன்றை நிருமாணிப்பதனை துரிதமாக நிறைவேற்றப்பட வேண்டிய முன்னுரிமைப் பணியொன்றாக இனங் காணப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக உள்ளக போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |