2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்திற்காக காணிகளை உடைமையாக்கிக் கொள்ளல் - அம்பாந்தோட்டை துறைமுக கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் சுமார் 491.5 ஹெட்டயார் காணி உடைமையாக்கிக் கொள்வதற்கு இனங்காணப்பட்டுள்ளதோடு, இந்தக் காணிகள் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காகவும் அதேபோன்று துறைமுகம் சார்ந்த கைத்தொழில்களை உருவாக்குவதற்காகவும் பயன்படுத்தப்படவுள்ளன. உடைமை யாக்கிக் கொள்ளப்படவுள்ள இந்த காணிகளில் சுமார் 400 குடும்பங்கள் தற்போது வசித்துவருவதோடு, அவர்களுக்கு மாற்றுக் காணிகளையும் நட்டஈட்டினையும் வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மாண்புமிகு அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |