2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
37 ஆவது தொலைநுட்பம் பற்றிய ஆசிய மாநாட்டை 2016 ஒக்றோபர் - நவெம்பர் மாதங்களில் இலங்கையில் நடாத்துவதற்கான உபசரணை - பூமியை அளத்தல், வரைபடமாக்கல் போன்றவற்றுக்காக புதிய தொழினுட்பத்தை பயன்படுத்துவதற்குரியதாக நடாத்தப்படும் "தொலைநுட்பம் பற்றிய ஆசிய மாநாடு" தொலைநுட்பம் பற்றிய ஆசிய அமைப்பும் இந்த மாநாட்டின் உபசரணையை ஏற்கும் நாடும் வருடாந்தம் ஒழுங்குசெய்யும் முக்கிய மாநாடொன்றாகும். இந்த மாநாடு தொலைநுட்பம் மற்றும் அதன் பாவனையை விருத்தி செய்தல் சார்பில் ஆசிய - பசுபிக் வலய நாடுகளில் மாறிமாறி நடாத்தப்படுகின்றது. இதற்கமைவாக, 37 ஆவது தொலைநுட்பம் பற்றிய ஆசிய மாநாட்டை 2016 ஒக்றோபர் - நவெம்பர் மாதங்களில் இலங்கையில் நடாத்தும் பொருட்டு காணி அமைச்சர் மாண்புமிகு எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |