2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்ட ஊழியர்களுக்கு காணி உரிமையுடனான வீடொன்றின் உரிமையினை வழங்குவதற்கான 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் - அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் பெருந்தோட்ட துறைசார்ந்த மக்கள் தற்போது வசிக்கும் கடினமான லயன்அறை வாழ்க்கை முறையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு காணி உரிமையுடன் வீடொன்றினதும் உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய சகல தரப்பினர்களினதும் உடன்பாட்டுடன் இந்த நோக்கத்திற்காக பின்பற்றப்பட வேண்டுமென கண்டறியப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் பெருந்தோட்ட ஊழியர்களுக்கு 07 பேர்ச்சஸ் காணித் துண்டொன்றை வழங்குவதற்கும் இதற்கு வங்கியொன்றினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய சட்டபூர்வ ஆவணமொன்றை வழங்குவதற்கும் பல்வேறுபட்ட நிறுவனங்களினால் நிருமாணிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பினும், பின்னர் சட்ட விரோதமாக மூன்றாம் தரப்பிற்கு கையளிக்கப்பட்டுள்ள வீடுகளை மீண்டும் பொறுப்பேற்று இந்த வீடுகளுக்காக நட்டஈடு வழங்காது பெருந்தோட்ட தொழிலாளர் வீடமைப்பு கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கையளிப்பதற்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மாண்புமிகு லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |