• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச பொலிஸ் (INTERPOL) அறிமுகப்படுத்தியுள்ள விசேட கடவுச் சீட்டை ஏற்றுக் கொள்ளல்

- இலங்கையும் உறுப்புரிமை கொண்டுள்ள சருவதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பினால் சருவதேச பொலிசாரின் உத்தியோகபூர்வ கடமைகளுக்குரியதாக எல்லைதாண்டிச் செல்லும் புலனாய்வு நோக்கங்கள் போன்றவற்றுக்காக வெளிநாட்டுப் பயனங்களில் ஈடுபடும் சருவதேச பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் சட்டத்தை அமுல்படுத்தும் உத்தியோகத்தர் களுக்கும் துரிதமாக விசா பெறக்கூடிய விதத்தில் விசேட கடவுச்சீட்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே மலேசியா, மாலைதீவு, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், லாவோஸ், பிலிப்பைன், சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகள் சிலவும் அடங்கலாக சருவதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பில் 72 உறுப்பு நாடுகள் இந்த வெளிநாட்டுக் கடவுச்சீட்டை அங்கீகரித்துள்ளன. இதற்கமைவாக சருவதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பின் கோரிக்கையின் பேரில் இந்த விசேட கடவுச்சீட்டினை ஏற்பதற்குரியதாக உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரத்தினைக் கையளிப்பதற்குமாக மக்கள் ஒழுங்கு மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.