2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஊழல் எதிர்ப்பு செயலகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை நல்குவதற்காக இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்றை ஆட்சேர்ப்புச் செய்தல் - ஊழல் எதிர்ப்பு செயலகத்தின் நடவடிக்கைகளை துரிதமாக வினைத்திறனுடனும் நடாத்திச் செல்வதற்கு ஒத்துழைப்பு நல்கும் பொருட்டு இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்றை தற்காலிக அடிப்படையில் மூன்று (03) மாத காலத்திற்காக ஆட்சேர்ப்புச் செய்யும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |