• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கேள்வி கோரப்படாது முன் வைக்கப்படும் கருத்திட்ட பிரேரிப்புகள்

- கடந்த சில ஆண்டுகளில் கேள்வி கோரப்பட்டமைக்கான செயற்பாடொன்றாக அல்லாது கருத்திட்ட பிரேரிப்பாளரினால் அவருடைய விருப்பத்தின் பேரில் முன்வைக்கப்படும் கருத்திட்டப் பிரேரிப்புகள் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் செயற்பாடு காணக்கூடியதாக உள்ளதோடு, இது ஆட்சேபனைகளுக்கு உள்ளான விடயமொன்றானது. அவ்வாறு கோரப்படாத சில கருத்திட்டப் பிரேரிப்புகளின் விலைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது போட்டி அடிப்படையில் அல்லாமையினால் நாட்டிற்கு ஏற்க முடியாத கூடுதலான செலவொன்று ஏற்பதற்கு நேரிட்டுள்ளது. இந்த நிலைமையைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதற்காக கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

* கேள்வி கோரப்படாது சுயமாக சமர்ப்பிக்கப்படும் கருத்திட்டப் பிரேரிப்புகளை கொள்கை ரீதியில் ஏற்காமல் இருப்பதற்கும்.

* எதிர்காலத்தில் இத்தகைய பிரேரிப்புகள் யாவும் சம்பந்தமாக அரசாங்க கேள்விச் செயல்முறைக்கு அமைவாக நடவடிக்கை எடுத்தல்.

* ஏற்கனவே பல்வேறு மட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பிரேரிப்புகளை மீளாய்வு செய்து நாட்டிற்கு விசேட பொருளாதார பெறுமதி மிக்க பிரேரிப்புகள் ஒவ்வொன்றையும் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்.