• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-04-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கருத்திட்டமல்லாத யப்பான் நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் 2014/2015 இன் கீழ் யப்பான் உள்நாட்டு உற்பத்திகளை நாட்டிற்கு வழங்குவதற்காக 550 மில்லியன் ரூபாவைக் கொண்ட (யப்பான் யென் 500 மில்லியன்) நன்கொடை

- இலங்கைக்கும் யப்பானுக்கும் இடையில் நிலவும் நீண்டகால நற்புறவை பலப்படுத்தும் நோக்கில் யப்பான் அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் கருத்திட்டமல்லாத நன்கொடையின் கீழ் இலங்கை மக்களின் போக்குவரத்து வசதிகளையும் கமத்தொழில் செயற்பாடுகளையும் கட்டியெழுப்புவதன் சார்பில் யப்பான் உபகரணங்களை நாட்டிற்கு வழங்குவதற்காக 500 மில்லியன் யப்பான் யென் (சுமார் 550 மில்லியன் ரூபா) கொண்ட நன்கொடையொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கு யப்பான் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த உபகரணங்கள் இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கும் கமத்தொழில் அமைச்சின் கீழுள்ள அரசாங்க கமத்தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கப்படவுள்ளன. இதற்கமைவாக, மேற்போந்த நன்கொடை சார்பில் யாப்பான் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் பரிமாற்றல் பத்திரங்களை கைச்சாத்திடுவதற்காக கொள்கை உருவாக்கம், பொருளாதார அலுவல்கள், சிறுவர், இளைஞர் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.